நான்பெற்ற இன்பங்கள் என்சொல்ல ?
போராட்டம் எனக்கொன்றும்
.....புதிதல்ல ! - நெஞ்சம்,
புண்படாத நாளெல்லாம்
.....எனதல்ல !
நன்மைசெய்து பெற்றதுன்பம்
.....சிறிதல்ல ! - அதில்
நான்பெற்ற இன்பங்கள்
.....என்சொல்ல ?
பகைக்கின்ற மனிதர்கள்
.....குடிகொள்ள – நெஞ்சில்
பங்குவைத்தேன் கருணையெனும்
.....மொழிதுள்ள !
துரோகங்கள் சூழுவதும்
.....இன்றல்ல - அவை
சூழாமல் பெறுவதெல்லாம்
.....சுகமல்ல !
---------------------------------------------------------------------------------
சந்தத் தமிழன் எழில் வேந்தன்
ஆட்சியர்,
“எழில்வேந்தன்” வலைப்பூ,
[தி.ஆ: 2052, மடங்கல் (ஆவணி)06]
{22-08-2021}
------------------------------------------------------------------------------