எனக்கு வேண்டாம் !
போராட்டம் இல்லாத
.....நாளெனக்கு வேண்டாம் !
பொங்கிவரும் தமிழின்றி
.....நினைவெனக்கு வேண்டாம் !
தாலாட்டக் கவியில்லாக்
.....களமெனக்கு வேண்டாம் !
சந்தப்பணி செய்யாத
.....சிந்தனையும் வேண்டாம் !
மாவாட்டும் செயல் போலே
.....பகைநினைப்பு வேண்டாம் !
மதுவெல்ல நட்பிருக்கு
.....வேறொன்று வேண்டாம் !
காலாட்டி வாழ்கின்ற
.....சோம்பல்சுகம் வேண்டாம் !
கைகட்டிப் பைகட்டும்
.....பெருநிதியம் வேண்டாம் !
------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
சந்தத் தமிழன் எழில் வேந்தன்
ஆட்சியர்,
“எழில்வேந்தன்” வலைப்பூ,
[தி.ஆ: 2052, மடங்கல் (ஆவணி)06]
{22-08-2021}
--------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக